10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் – குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு!!
நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்ற தேர்வுகள் எதுவும் நேரடியாக நடத்தப்படக் கூடாது எனவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அதற்கான அட்டவணையும் மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி சிபிஎஸ்இ தேர்வுகள் மே 4 ஆம் தேதியும், ஐசிஎஸ்இ தேர்வுகள் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியும் தொடங்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்தப்படுவதாக கேரள குழந்தைகள் நல ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது.
ஐ.டி துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
இந்த புகாரை பரிசீலனை செய்த குழந்தைகள் நல ஆணையம் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களில் கீழ் செயல்படும் பயிலும் மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், தேவைகள் இருப்பின் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.