சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு போலி அட்டவணை – மத்திய அரசு எச்சரிக்கை!!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது, மாணவர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம் என பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு:
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ள நிலையில், ஜூலை 15ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் தேர்வுகள் இம்முறை கொரோனா பரவல் காரணமாக கால தாமதம் ஆகி உள்ளது. மேலும் தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற நேரலையில் தெரிவித்து இருந்தார்.
ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் மே 4 முதல் ஜூன் 10ம் தேதி வரை 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி என ஒரு விபரம் அடங்கிய தொகுப்பு உள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!
இது குறித்து தற்போது பத்திரிக்கை தகவல் அலுவலகம் மறுப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொதுத்தேர்வு அட்டவணை போலியானது, அதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்