அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் – புதுச்சேரி அரசு ஆலோசனை!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனியாக கல்வி வாரியம் இல்லை.இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிற்கு மேல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.
அரசு ஆலோசனை:
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு தனியாக கல்வி வாரியம் இல்லை. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத் திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தனியாக கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து மாநில கல்வி வாரியம் ஒரு சில நடவடிக்கை எடுத்தது. அதன் பின் அது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அது அடுத்ததடுத்த ஆண்டுகளில் நகர்ந்து கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் 5 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் இருந்தது. அதன் பின் அடுத்த ஆண்டு 6 ஆம் வகுப்பிற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் வேறு வழி இல்லாமல் 6 ஆம் வகுப்பில் இருந்து தமிழக பாடத்திட்டத்தில் படித்தனர்.
WhatsApp பயனாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செய்திகளை எடிட் செய்யும் புதிய வசதி அறிமுகம்!
தற்போது புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 6ம் வகுப்பில் இருந்து படிப்படியாக விரிவாக்கம் செய்திட புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், மாநிலத்தில் ஏற்கனவே 5 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் இருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.