CBSE 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு – ஜூலை 25 வரை காலக்கெடு நீட்டிப்பு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடும் என அறிவித்துள்ள நிலையில், மதிப்பீடுகளை செய்யும் பள்ளிகளுக்கு ஜூலை 25 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
மதிப்பெண்கள் கணக்கீடு
கடந்த மே மாதம் நடைபெற இருந்த CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கொரோனா 2 ஆம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க முடிவு செய்த CBSE கல்வி வாரியம், அதற்கான வழிகாட்டுதல்களை CBSE சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் அளித்தது. இதை பின்பற்றி CBSE பள்ளிகள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீடுகளை செய்து வந்த நிலையில், அதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
TNUSRB 2ம் நிலை காவலர் PET தேர்வுக்கு ‘இது’ கட்டாயம் – டிஜிஜி அறிவிப்பு!
அதாவது ஜூலை 31 ஆம் தேதி இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று CBSE கல்வி வாரியம் அறிவித்துள்ள நிலையில், CBSE பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கான இறுதி மதிப்பீடுகளை வழங்குவதற்கு ஜூலை 22 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இதை ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ’12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மதிப்பீடுகளை கணக்கிடுவதில் CBSE பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 22) முடிவடைவதால், அவற்றை ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டித்து கொடுக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது ஜூலை 22 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசத்தில், மதிப்பீடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மன அழுத்தத்துக்கு உட்பட்டு சில தவறுகளை செய்து வருவதாக சில கோரிக்கைகள் பெறப்பட்டன. அதனால் காலக்கெடுவை ஜூலை 25 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காலத்துக்குள் மதிப்பீடுகளை முடிக்காத பள்ளிகளது முடிவுகள் தனியாக அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.