ஆகஸ்ட் மாதம் CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – வெளியான தகவல்!
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வுகள் மதிப்பீடு முறையில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கல்வி வாரியம் இன்று உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ தேர்வுகள்:
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான விரிவான மதிப்பீட்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில், இதற்கு முன்னர் எழுதிய பொதுத்தேர்வுகள், அலகுதேர்வுகள், இடை பருவத்தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
தமிழக நகர பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம் – முதல்வர் உத்தரவு!
கம்பார்ட்மென்ட் தேர்வுகள், என்.ஐ.ஓ.எஸ், மற்றும் ரிப்பீட்டர்கள் ஆகியவற்றிற்கு ஆஜராகும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த மதிப்பீடு முறையில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை மேம்பாட்டுத் தேர்வை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணம் தாக்கல் செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
எழுத்துத் தேர்வுக்கு வர விரும்பும் மாணவர்கள் முதலில் CBSE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இல் பதிவு செய்ய வேண்டும். இறுதி மதிப்பெண்களை தயாரிப்பதற்கான கணக்கீட்டு செயல்முறையை தொடங்குமாறு சிபிஎஸ்இ ஏற்கனவே பள்ளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் பள்ளியின் முதல்வர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட முடிவுக் குழுவை அமைக்குமாறு கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு ஜூலை 31ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.