CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீடு முறைகள் வெளியீடு – கல்வி வாரியம் விளக்கம்!
மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்களுக்கான மதிப்பீடு முறையை உச்சநீதிமன்றத்தில் கல்வி வாரியம் சமர்ப்பித்துள்ளது.
மதிப்பீடு முறை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்த அளவீடுகளை வகுப்பதற்கு மத்திய அரசு 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை ஜூன் 4ம் தேதி அமைத்தது.
தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பரிசீலனை!
அளவீடு முறைகள் குறித்த அறிவிப்பை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு மதிப்பீடு முறையை இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, மாணவர்கள் 12ம் வகுப்பு இடைப்பருவ தேர்வுகளில் எடுத்துள்ள மதிப்பெண்கள் 40% அளவிற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
11ம் வகுப்பு இறுதி தேர்வின் அடிப்படையில் 30% மதிப்பெண்களும், 10ம் வகுப்பு இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 30% மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறையில் மாணவர் தேர்ச்சி அடைவதற்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான பிரிவில் சேர்க்கப்படுவார்கள். அதிக மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பின்னர் நடத்த இருக்கும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.