CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பீடுகள் – விசாரணை நாளை ஒத்திவைப்பு!
மத்திய அரசு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான CBSE பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை நாளை (ஜூன் 22) ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (CISCE) 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட முடிவை எதிர்த்து மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இதில் சில மாணவர்கள் CBSE மற்றும் CISCE இன் தேர்வு மதிப்பீடுகளை குறித்து பதிலளிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி – புதிய வடிவில் பாடங்கள்!!
ஆனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அம்மாணவர்களுக்கான தேர்வு மதிப்பீடு செய்வதற்கான திட்டத்தை, கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததற்கு எதிரான சில மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நாளை நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த வகையில் மாணவர்கள் குழு அளித்த மனுவுக்கு வழக்கறிஞர் மஞ்சு ஜெட்லி அவர்கள் நீதிமன்றத்தில் பதிலளித்தார்.
அதில் CLAT, NEET போன்ற பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன நிலையில்,பொதுத் தேர்வுகளின் மறு தேதி குறித்த எந்த தெளிவுகளும் கொடுக்கப்படவில்லை. CBSE ன் மதிப்பீட்டுக் கொள்கையின்படி, 12 ஆம் வகுப்புக்கு 40 சதவிகிதம், 11 ஆம் வகுப்புக்கு 30 சதவிகிதம் மற்றும் 10 ஆம் வகுப்புக்கு 30 சதவிகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்படும். தொடர்ந்து12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீடு மதிப்பெண்கள் அந்தந்த பள்ளிகளால் பதிவேற்றப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும், CBSE தேர்வு வாரியத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு, மறு தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பீடுகளாக கருதப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் CBSE 12 ஆம் வகுப்பு மதிப்பெண் முடிவுகள் ஜூலை 31 க்குள் அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.