CBSE 12ம் வகுப்பு மதிப்பீடு முறை இன்று வெளியீடு – கல்வி வாரியம் தகவல்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி மதிப்பீடு முறை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீடு முறை:
சிபிஎஸ்இ கல்வி வாரியம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்துள்ளது. உயர்கல்வி சேர்க்கை மாணவர்களுக்கு 12 ம் வகுப்பு இறுதி மதிப்பெண்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இறுதி மதிப்பெண்களின் அளவீடு முறை குறித்து நிர்ணயம் செய்ய 12 பேர் கொண்ட குழு ஒன்றை கல்வி வாரியம் அமைத்துள்ளது.
தமிழகத்தில் பேருந்து சேவை, பள்ளி & கல்லூரிகள் திறப்பு – முதல்வர் வெளியிட்ட வீடியோ!
அந்த குழுவில், கல்வி அமைச்சின் இணைச் செயலாளர் விபின் குமார், பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவுத்துறை, நிதி பாண்டே, கமிஷனர் கே.வி.எஸ், கல்வி இயக்குநரகத்தைச் சேர்ந்த உதித் பிரகாஷ் ராய், பள்ளிகளின் இரண்டு பிரதிநிதிகள், மற்றும் NCERT, மற்றும் UGC பள்ளிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். 10 நாட்களுக்குள் 12 ம் வகுப்பு இறுதி மதிப்பீடு முறை குறித்து அறிவிக்கப்படும் என்று ஜூன் 4ம் தேதி கல்வி வாரியம் அறிவித்தது. அதன்படி, இன்று மாலைக்குள் 12ம் வகுப்பு மதிப்பீடு முறை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மாணவர்களின் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 12ம் வகுப்பிற்கான மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனுடன் உள்மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்களும் கணக்கிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளிகள் மாணவர்களின் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்களை கல்வி வாரியத்திடம் சமர்ப்பிக்கும் தேதி ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதிப்பீடு வழங்குவதற்கு கல்வி வாரியம் வழங்கியுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.