ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் – பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை!

0
ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் - பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை!
ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் - பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை!
ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் – பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை!

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளை தொடங்க கூடாது என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கைவிடுத்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகள்

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் அந்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திட வேண்டும் என பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் மாணவர்களுக்கு அதிக சுமை மற்றும் மனசோர்வு ஏற்படும். மேலும் நன்னெறி கல்வி, வாழ்க்கைத் திறன், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, சமூக சேவை, பணித்திறன் போன்ற பாடம் இல்லாத நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். அதனால் பள்ளிகளில் வகுப்புகள் முன்னதாகவே தொடங்குவதை முதல்வர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி முடிய வேண்டும். இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!