சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைக்கும் நடைமுறையில் மாற்றம் – சி.பி.எஸ்.சி வாரியம்
மத்திய இடைநிலை வாரிய பாடத்திட்டத்தில் பள்ளிகளை புதிதாக இணைப்பதற்குரிய நடைமுறைகளை மாற்றியமைத்துள்ளதாக சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை:
2020 தேசிய கல்வி கொள்கையின் திட்டங்களை முதலில் செயல்படுத்தி வரும் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் தற்போது அடுத்த திட்டத்தை செயல் படுத்த இருக்கிறது. புதிய தேசிய கல்வி கொள்கையானது முந்தைய தேசிய கல்விக் கொள்கைக்கு (1986) மாற்றாக நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கொள்கை ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரைக்குமான விரிவான மற்றும் முழுமையான வடிவமைப்பாகும். மேலும் இந்த கல்விக் கொள்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கல்வியோடு இணைந்த தொழிற்பயிற்சியையும் முன் வைக்கிறது.
இந்த கல்விக் கொள்கை 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது சிபிஎஸ்சி பள்ளிகளாக மாற்றுவதற்கு சேர்க்கை விதிகளை தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரையின் படி மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
நடைமுறை மாற்றம்:
சி.பி.எஸ்.இ இணைப்பு அந்தஸ்து பெறும் பள்ளிகளுக்கான நடைமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. புதியதாக இணைக்கும் பள்ளிகள், இணைப்பை புதுப்பிக்கும் பள்ளிகள், பள்ளிகளின் இணைப்பை நீட்டித்தல் போன்ற விண்ணப்பங்களுக்கு தனித்தனியாக நடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. புதிய இணைப்பு பெறும் பள்ளிகளுக்கு 9,10ம் தேதிகளில், புதுப்பிக்கும் பள்ளிகளுக்கு மார்ச் 12ம் தேதியும், நீட்டிப்போருக்கு மார்ச் 13ம் தேதியும் ஆன்லைன் வழிகாட்டும் நிகழ்ச்சி நடக்கும். அதிக விவரங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்