ஆன்லைனில் சிபிஎஸ்சி 9, 11ம் வகுப்பு தேர்வுகள் – மாணவர்கள் கோரிக்கை!!
சிபிஎஸ்சி தேர்வு வாரியங்களில் 9 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் ஆப்லைன் முறையில் நடத்தப்படுவதாக பள்ளிகள் அறிவித்துள்ள நிலையில் ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிபிஎஸ்சி வாரியம்:
சிபிஎஸ்சி வாரியத்தின் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் பள்ளிகள் பிப்ரவரி மாதத்தில் திறக்கப்பட்டது. தற்போதைய கோவிட்-19 தொற்றின் ஆபத்து காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!!
ஆனால் பல பள்ளிகள் முன்னதாகவே தங்கள் மாணவர்களுக்கு தேர்வுகளை நேரடி முறையில் நடத்துவதற்கு தேர்வு வாரியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடக்க உள்ளது.
கோரிக்கை:
தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும், ஆன்லைன் முறையில் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் சிபிஎஸ்சி 9 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கான வாய்ப்பில்லை.
இவ்வளவு பெரிய அளவில் ஆன்லைன் தேர்வுகளை நடத்துவது நடைமுறைக்கு எதிரானது என்று கூறினார். ஆனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் – நாளை தொடக்கம்!!
இது தொடர்பாக சிபிஎஸ்சி மாணவன் ஒருவர், தங்கள் பள்ளியில் ஆப்லைன் தேர்வுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும், பள்ளியில் போதுமான அளவு பயிற்சிகள் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், கொரோனா ஊரடங்கு மற்றும் நோய்பரவல் காரணமாக தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவது பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்