CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி இயக்ககம் தகவல்!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜூலை கடைசி வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிபிஎஸ்இ
தமிழகத்தில் சமீபத்தில் தான் தமிழக அரசின் கீழ் பயின்ற பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனால் மாணவர்கள் அனைவரும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்டு கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வரையும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி பேராசிரியர் அனைவரும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் விளக்கம்!
அந்தவகையில், தாமதமாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டால், கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை தாமதப்படுத்துவது, ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களையும் பாதிக்கும் என்று பயத்தில் இருக்கிறார்கள். அதனால் அனைத்து ஆசிரியர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிபிஎஸ்இ பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் ஐந்து நாட்கள் வரை மட்டும் கல்லூரிகளில் விண்ணப்பங்களை அளிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழக அரசின் மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகி, முதல் நாளில் இருந்தே மாணவர்களுக்கான சேர்க்கையை அனைத்து கல்லூரிகளும் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றன. ஆனால், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாததால் மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனால் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.