CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் & மதிப்பெண் கணக்கீட்டு விவரங்கள் இதோ!

0
CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் & மதிப்பெண் கணக்கீட்டு விவரங்கள் இதோ!
CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் & மதிப்பெண் கணக்கீட்டு விவரங்கள் இதோ!
CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் & மதிப்பெண் கணக்கீட்டு விவரங்கள் இதோ!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற CBSE வாரியத்தின் 12ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வு முடிவுகள் குறித்த சில முக்கிய விஷயங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

CBSE தேர்வு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு முடிவை மார்ச் 11 அன்று அறிவித்தது. வழக்கத்தின் படி இத்தேர்வு முடிவுகள் CBSE வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படாமல், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்போது, CBSE போர்டு 12 ஆம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு முடிவுகளும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – நிதியமைச்சர் அறிவிப்பு!

இதற்கு முன்னதாக, நாடு முழுவதும் நிலவி வந்த கொரோனா தொற்று நிலைமையை கவனத்தில் கொண்டு CBSE வாரியத் தேர்வுகளை 2 பருவமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தது. இப்போது 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தவிர CBSE மாணவர்களுக்கான 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இப்போது விரிவாக காணலாம். அந்த வகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 2ம் பருவத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இந்த 2ம் பருவத் தேர்வில், முதல் பருவத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பங்கேற்கலாம். ஆனால் CBSE மாணவர்களுக்கான இறுதி முடிவுகள் செய்முறை தேர்வுகள், உள்மதிப்பீட்டு தேர்வுகள் மற்றும் 2 பருவத் தேர்வுகளையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும். மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2ம் பருவத் தேர்வில் 50% பாடங்களும் இடம்பெறும்.

இப்போது கொரோனா பரவலால் ஏற்பட்ட சிக்கல்கள் நிமித்தம் CBSE மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் அனைத்தும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. தவிர தேர்ச்சி பெறுவதற்கான அடிப்படை மதிப்பெண்களும் 13 ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த பாடத்திட்டங்களும் 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முறை CBSE மாணவர்களுக்கு மதிப்பீட்டு அட்டைகள் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இறுதி மதிப்பெண்களும் CBSE வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படாது என்று கருதப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!