சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை – அதிகாரபூர்வ தகவல்!!

0
சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை - அதிகாரபூர்வ தகவல்!!
சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை - அதிகாரபூர்வ தகவல்!! சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை - அதிகாரபூர்வ தகவல்!!
சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை – அதிகாரபூர்வ தகவல்!!
சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது. இதனால் 10ம் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்வு ரத்து:

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக் கூறி பல தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்து வந்தது. மத்திய அரசு இதனால் ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தள்ளி வைப்பதாகவும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளுக்கு திறனாய்வு தேர்வு – கல்வித்துறை ஆலோசனை!!!

மதிப்பெண் கணக்கீடு:

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து குழப்பங்கள் நிலவி வந்தது. இதனால் சிபிஎஸ்இ கல்வி வாரியம் சார்பில் கடந்த ஆண்டு வழங்கிய 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு பற்றி ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படும். தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் தேதி அறிவிக்கப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அனுமதி – ஏஐசிடிஇ அறிவிப்பு!!

முக்கிய தகவல்கள்:

2021 சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு Objective Criteria அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்த அனுமதியளிக்கப்படும். Objective Criteria பற்றிய விதிகளை சிபிஎஸ்சி வாரியம் இன்னும் உருவாக்கவில்லை. மதிப்பீடு திட்டம் குறித்து சிபிஎஸ்இ கூடுதல் விதிகளை விரைவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மதிப்பெண்களின் மீது திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கொரோனா நிலைமை சரியான பின்னர் தேர்வுகள் அறிவிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

சிபிஎஸ்இ கடந்த ஆண்டு முறை:

ஒரு மாணவர் 3 தேர்வுகளுக்கு மேல் எழுதியிருந்தால், நிலுவையில் உள்ள தாள்களுக்கான மதிப்பெண்களாக சராசரியாக மூன்று தாள்கள் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படும். குறைந்த தாள்களில் தோன்றிய மாணவர்களுக்கு, சராசரியாக அதிக மதிப்பெண் பெற்ற இரண்டு பாடங்களை அடிப்படையாக கொண்டு மீதமுள்ள தாள்களுக்கு ஒதுக்கப்படும். மூன்று தேர்வுகளுக்கு குறைவாக தேர்வு செய்யாத மாணவர்களுக்கு, உள் / நடைமுறை / திட்ட மதிப்பீட்டின்படி அவர்களின் மதிப்பெண் குறிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!