CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள்! முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் CBSE 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBSE:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த CBSE திட்டமிட்டது.
20 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், விவசாயிகளின் கடன் தள்ளுபடி – அசத்தல் தேர்தல் வாக்குறுதிகள்!
அந்த வகையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு 2 கட்டங்களாக நடத்தபடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி கடந்த 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் கட்ட பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கியதால் மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அதனால் பருவத்தேர்வு முடிவுகளும் தாமதமானது. தற்போது மாணவர்கள் எப்போது தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
IND vs WI 2nd ODI: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 238 ரன்கள் இலக்கு! இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!
இந்த நிலையில் முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற தகவல் CBSE முதல் பருவ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவெண், பிறந்த தேதி, போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். Digilocker செயலி மற்றும் UMANG செயலி மூலம் சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் விரைவாக தெரிந்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.