சிபிஎஸ்சி 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு – அதிகாரப்பூர்வ தகவல்!!
சிபிஎஸ்சி வாரியம்:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மே 4 முதல் ஜூன் 10ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும், மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு ரத்து – இடைநிற்றல் அதிகரிக்கும் என அச்சம்!!
பள்ளி தாமதமாக திறக்கப்பட்ட காரணத்தால் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான பாடங்களில் இருந்து 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத்தின் படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 5 முழு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியலில் மேலும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
அதிகாரிகளின் பதில்:
மத்திய இடைநிலை கல்வி வாரியம் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. கல்வி அதிகாரி ஒருவர், முன்னதாக அறிவிக்கப்பட்டதன் படி, பாடங்கள் குறைக்கப்ட்டுள்ளது. மேலும், பாடங்கள் குறைக்கப்படாது. 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு மே 27 ம் தேதி அன்று நடக்கும் என்று அறிவித்துள்ளார். தேர்வின் முடிவுகள் ஜூலை 15ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்