FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

0
FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனையடுத்து மற்ற வங்கிகள் கடன்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களுக்கான  வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.

வட்டி விகிதம்:

இந்தியாவில் 2022ம் ஆண்டில் மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தியுள்ளது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % ஆக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. அதனால் மாதாந்திர EMI செலுத்தும் நபர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே போல வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. பள்ளிகள் மூடல் – குழப்பத்தில் சீன அரசு!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் பிரபல திட்டமான நிலையான வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதத்தை வங்கிகள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மற்ற வங்கிகளை தொடர்ந்து தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (CBI) நிலையான வைப்பு தொகை (FD) திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 75 bps வரை உயர்த்தியுள்ளது. மேலும் 555 முதல் 999 நாட்களுக்கான புதிய  FD திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!