ரூ.15,000/- சம்பளத்தில் CBI வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கவும்..!
கடந்த சில நாட்களுக்கு முன் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் FLC Counsellor, Office Assistant, Attender, Guard cum Gardener ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.
CBI வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (CBI) காலியாக உள்ள FLC Counsellor, Office Assistant, Attender, Guard cum Gardener ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் FLC Counsellor பணிக்கு ஏதேனும் ஒரு Graduation அல்லது Post Graduation Degree படித்தவர்களும், Office Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Graduation, BSW, BA, B.Com Degree படித்தவர்களும், Attender பணிக்கு 12ம் வகுப்பு படித்தவர்களும், Guard cum Gardener பணிக்கு 7ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
FLC Counsellor பணிக்கு அதிகபட்சம் 65 வயது எனவும், Office Assistant / Attender பணிகளுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது எனவும், Guard cum Gardener பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.15,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (27.05.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.