CBI ஊழியர்கள் தாடி வைக்க ஜீன்ஸ் அணிய தடை – இயக்குனர் உத்தரவு !!
சி.பி.ஐ. ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் கள் அணிய மாற்றும் தாடி வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சி.பி.ஐ. இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ அதிகாரிகளுக்கு உத்தரவு :
மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ, இந்திய அரசின் உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும். காவல் துறைக்கான அதிகாரபூர்வ அமைப்பாகவும் உள்ளது. இது சிறப்பு காவல் துறையாகும் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள்கடத்தல், தீவிரவாதம் முதலான வழக்குகளை சி பி ஐ விசாரித்து வருகிறது . இந்த அதிகாரிகளுக்கு தனியாக சீருடைகள் இல்லை. வழக்கமான ஆடைகளை சி பி ஐ ஊழியர்கள் அணிகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த பிப்ரவரி சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்தார். இவர் ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் நகரை சேர்ந்தவர். ஏற்கனவே அவர் மகாராஷ்டிரா கேடர் ஐபிஎஸ்அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.இவர் தற்போது சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பெற்ற பின்னர் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறார்.
கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளம் – தமிழ் மொழி புறக்கணிப்பு !!
இந்த நிலையில் சி.பி.ஐ.யின் அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் அலுவலகத்தில் சாதாரண ஆடை அணிய வேண்டும். என்றும் ஜீன்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் போன்றவை அணிய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.மேலும் தாடி வளர்க்க கூடாது. கிளீன் ஷேவ் செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.நாடு முழுவதும் உள்ள சி.பி.ஐ அலுவலகங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படும். இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கிளை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.