CBI ஆணையத்தில் ரூ.40,000/- ஆரம்ப சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அமைப்பில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant பணிக்கு என்று ஆள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பதிவை முழுமையாக வாசித்து அதன் பின் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
சிபிஐ வேலைவாய்ப்பு விவரங்கள்:
CBI பணியிடங்கள்:
வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Consultant பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
CBI தகுதிகள்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Inspectors அல்லது அதற்கு மேல் பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Investigation மற்றும் Prosecution of Criminal Cases in the Court of Lawல் 10 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
CBI ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.40,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.
CBI தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CBI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும் வண்ணம் பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது இப்பணிக்காக இறுதி வாய்ப்பு நாளையுடன் (25.02.2022) நிறைவடைவதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.