ரூ.40000/- சம்பளத்தில் மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Consultant பணியிடங்களை நிரப்ப மத்திய புலனாய்வு பணியகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க 15.04.2022 இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மத்திய புலனாய்வுப் பணியக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய அரசு துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree முடித்தவர்கள் Consultant பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மத்திய மற்றும் மாநில அரசில் Inspector ஆக பணிபுரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
- விண்ணப்பதாரர் 10 வருடம் பணி சார்ந்த துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருப்பது அவசியம் ஆகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.