தமிழகத்தில் காவல்துறை மீதான புகார் – விசாரிக்க CB-CIDக்கு அதிகாரம் – அரசாணை வெளியீடு!
நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் காவல்துறை மீதும் சில புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து விசாரிக்க தற்போது சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி:
இந்தியாவில் காவல்துறை மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் தனது முழு பாதுகாப்பையும் அளிக்கிறது. குற்ற சம்பவங்களில் இருந்து சமுதாயத்தை மீட்டெடுத்து வருகிறது. இருந்தாலும் நம் நாட்டின் சட்டத்தின்படி மக்கள் காவல்துறையின் மீது புகாரளிக்கலாம். அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு காவல்துறை மீது புகார் அளிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற அமைப்பினர்கள் காவல்துறை மீதான தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் தமிழ்நாடு காவல் துறையின் கீழ் சிபிசிஐடியில் புகார் பிரிவு அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது தமிழக அரசு காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க இனி சிபிசிஐடிக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
Exams Daily Mobile App Download
இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறை இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சிபிசிஐடி புகார் பிரிவில் ஓய்வுபெற்ற பணியாளர்களை நியமிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது இந்த விதிகளின் படி தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.