மத்திய அரசில் MTS வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் MTS, Registrar, Accounts Officer, Caretaker, Court Master / Steno போன்ற பணிகளுக்கு என்று மொத்தமாக 120 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Central Administrative Tribunal (CAT) |
பணியின் பெயர் | MTS, Registrar, Accounts Officer, Caretaker, Court Master / Steno |
பணியிடங்கள் | 120 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 45 days from the ad |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CAT காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள அறிவிப்பில், MTS, Registrar, Accounts Officer, Caretaker, Court Master / Steno போன்ற பணிகளுக்கு என்று மொத்தமாக 120 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
CAT கல்வித் தகுதி:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய துறையில் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவங்களின் பணி புரிபவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12ம் வகுப்பு / ITI / Diploma / Degree / Master Degree போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் தகுதிகள் குறித்த விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
CAT வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
CAT தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CAT விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.