தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சரண்டர், ஈட்டிய விடுப்பு? வருவாய்துறை சங்கம் வலியுறுத்தல்!

0
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சரண்டர், ஈட்டிய விடுப்பு? வருவாய்துறை சங்கம் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சரண்டர், ஈட்டிய விடுப்பு? வருவாய்துறை சங்கம் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சரண்டர், ஈட்டிய விடுப்பு? வருவாய்துறை சங்கம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டாக பிடித்து வைத்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர், போலீசாரின் ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி, பென்சன் உள்ளிட்ட பலன்களை மீண்டும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு வருவாய் துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் வி.தர்மராஜ் வலியுறுத்தியுள்ளார்.

வலுக்கும் கோரிக்கைகள்:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை இருக்கும். அந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தவில்லை என்றால் அதற்கான சம்பளத் தொகையை பணமாக பெற்றுக்கொள்ளலாம். இதுவே ஈட்டிய விடுப்பு (EL) எனப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது கடந்த ஏப்ரல் 26 வரை ஈட்டிய விடுப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக கூறினார்கள். எனவே இந்த ஏப்ரல் 26 வந்த போது ஈட்டிய விடுப்பு கிடைக்கும் என ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!

இருப்பினும் இந்நிலையில் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பு நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்களுக்கு ஈட்டிய விடுப்பு கிடைக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு17 நாட்களுக்கு ஈட்டிய விடுப்பு கிடைக்கும். இதில் 2 நாட்கள் சர்வீஸ் ரெஜிஸ்டரில் சேர்ந்துவிடும். மீதமிருக்கும் 15 நாட்களை சரண்டர் செய்து பணமாக பெற்று கொள்ளலாம். இந்த பணத்துக்கு வரியும் கட்ட வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈட்டிய விடுப்பு வழங்கப்படவில்லை.

இந்த நாட்களை எல்லாம் சர்வீஸ் ரெஜிஸ்டரில் சேர்த்துக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு ஊழியர் தனது பணிக்காலத்தில் 240 நாட்கள் வரை ஈட்டிய விடுப்புக்கு சேர்த்து வைத்து கொள்ளலாம். அதற்கு மேல் ஈட்டிய விடுப்பு நாட்களை சேமிக்க முடியாது என கூறியுள்ளனர். எனவே முதல்வர் இது குறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் வி.தர்மராஜ், பேசியது, கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர், ஆசிரியர், போலீசாரின் சரண்டர், ஈட்டிய விடுப்புக்களை அரசு விரைவில் வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி 3 சதவீத உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் தற்போது அமலில் உள்ள பங்களிப்பு பென்சன் திட்டத்தின் (CPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு பென்சனும் கிடைப்பதில்லை, எனவே தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!