காதல் பட நடிகருக்கு கொலை மிரட்டல் – டிக்டாக் பிரபலம் GP முத்து மீது காவல்துறையில் புகார்!
டிக்டாக் மூலமாக பிரபலமான ஜி.பி.முத்து உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதல் பட நடிகர் சுகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கொலை மிரட்டல்:
சமூக வலைத்தளங்களான யூட்யூப், பேஸ்புக்கை திறந்தாலே ஜி.பி. முத்து மற்றும் ஒரு சிலரின் ஆபாச வார்த்தைகள் பேசும் வீடியோக்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன. அவர்கள் அனைவரும் முன்னதாக டிக்டாக் என்ற சீன செயலி மூலமாக பிரபலமடைந்தவர்கள். அவர்களுக்கென தனி திறமைகள் எதுவும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் ஆபாச வார்த்தைகளால் பேசியே பிரபலமடைந்துள்ளனர். அதில் ஒருவரான ஜி.பி. முத்து ஆதித்யா தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் வந்தார். அதன் பின்னர் ப்ளாக் ஷீப் அவார்ட், விஜய் டிவி நிகழ்ச்சிகள் என புகழின் உச்சிக்கு சென்றார்.
இந்தியாவில் புதிதாக 44,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 464 பேர் உயிரிழப்பு!
ஆனால் என்ன புகழ் பெற்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு வீடியோக்களை நிறுத்தவில்லை. இந்நிலையில் காதல், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகரான நடிகர் சுகுமார் இவர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாக குழந்தைகள் பாடம் கற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இலக்கியா, ஜிபி முத்து உட்பட பல நபர்கள் ஆபாசங்கள் நிறைந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த எனது நண்பர் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொது செயலாளர் ஏழுமலை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானும் ஊடகங்கள் வாயிலாக பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்தேன்.அதனால் நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைத்தளம் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும் காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.