நாடு முழுவதும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் – 12 ஆம் வகுப்பு மாணவி மனு!

0
நாடு முழுவதும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் - 12 ஆம் வகுப்பு மாணவி மனு!
நாடு முழுவதும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் - 12 ஆம் வகுப்பு மாணவி மனு!
நாடு முழுவதும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் – 12 ஆம் வகுப்பு மாணவி மனு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநில அரசுகள் பள்ளிகளை திறக்காமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளை திறக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி 12ம் வகுப்பு மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் மேல்நிலை 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

இந்நிலையில் கடந்த ஆண்டு சிபிஎஸ்இ, மாநில வாரிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை பயில்வதால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றனர். இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வழக்கறிஞர் அமர் பிரேம் பிரகாஷ் என்பவர் மூலம் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் கவனிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. இதனால் ஏழை மாணவர்களுக்கு கல்வி என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தை தொழிலாளராக மாறும் நிலை ஏற்படுகிறது.

மேலும் நடுத்தர குடும்பத்து குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் விரைவாக பள்ளிகளை திறந்து மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு செல்ல மத்திய அரசு உத்தரவிடவோ அல்லது வழிகாட்டல் வகுக்கவோ வேண்டும். இன்னும் காலம் தாழத்தாமல் முழுமையான, விரைவான முடிவை பள்ளி திறப்பு குறித்து எடுக்க வேண்டும். இது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மனநிலை, உணர்வு குறித்த விவகாரம் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!