அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு – இடைக்கால தடை!

0
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு - இடைக்கால தடை!
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு - இடைக்கால தடை!
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு – இடைக்கால தடை!

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் எந்த ஒரு பணி நியமனமும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்:

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தேர்வானது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 2021 டிசம்பர் மாதம் தேர்வுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இதனை அடுத்து தேர்வு எழுதிய மதுரையை சேர்ந்த விநாயகமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், அவர் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி முதுகலை எம்.எஸ்.சி.,(கணிதம்)வரை தமிழ் வழியில் பயின்ற தாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் 2021ல் நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை எழுதியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் 125 மதிப்பெண்கள் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் பட்டியல் ஜூலை 8 ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முதுகலை பட்டத்தை மட்டும் தமிழ் வழியில் படித்தவர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஒன்றிய அரசின் கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்க தடை – மதுரை உயர்நீதிமன்ற கிளை!

Exams Daily Mobile App Download

இந்த வகையில் தேர்ந்தெடுக்கபடுவதால் பலரின் வாய்ப்புகள் பறிபோவதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியானவர்கள் பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எந்த ஒரு பணி நியமனமும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டதாக அமையும் என கூறி விசாரணை செப்.,15 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!