தொழிலில் கவனத்தை செலுத்தும் பாக்கியா, மகிழ்ச்சி அடையும் குடும்பம் – திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபி பாக்கியாவை ஏமாற்றியதை பாக்கியாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இருந்தாலும் கோபியின் ஆசைப்படி கோபியை விட்டு விலகி விட்டார். தற்போது முழுக்க முழுக்க தொழிலில் ஆர்வம் காட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கும் ராதிகாவும் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தான அனைத்து உண்மைகளும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனாலும், கோபிக்கு கொஞ்சம் கூட கஷ்டம் இல்லை. தற்போது கூட ராதிகாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கிறார். ஆனால், ராதிகாவுக்கு எப்பொழுது கோபி தான் பாக்கியாவின் கணவர் என்கிற உண்மை தெரிந்ததோ அப்பொழுதே கோபியை விட்டு விலக வேண்டும் என நினைக்க ஆரம்பித்து விட்டார்.
மாநிலத்திற்கு கனமழை காரணமாக ‘ஆரஞ்சு’ அலெர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ஆனால், கோபி தான் ராதிகாவை விடாமல் துரத்தி கொண்டிருக்கிறார். கோபி மட்டுமல்லாமல் ராதிகாவின் அம்மா, அண்ணன் என இருவருமே கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி கொண்டிருக்கின்றனர். ஆனால், ராதிகா இந்த விஷயத்தில் தெளிவாக தான் இருக்கிறார். கோபியை விட்டு விலகி மயூவை அழைத்துக்கொண்டு கண்டிப்பாக துபாய் சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார். ஆனால், கோபி ராதிகாவின் அண்ணனிடம் தற்போதும் கூட ராதிகாவை துபாய் செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறி கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இத்தனை பிரச்சனை நடந்த பிறகாவது கோபி ராதிகாவை விட்டு விலகி குடும்பத்துடன் சந்தோசமாக சேர்ந்து வாழுவார் என்று நினைத்தால் கோபி ராதிகாவை விடவே கூடாது என்று நினைக்கிறார். ஆனால், பாக்கியா இதற்கு பிறகு தான் கோபியின் துணை இல்லாமல் தனி ஆளாக வியாபாரத்தை பெருக்கி மொத்த குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள போகிறார். மேலும், பாக்கியாவின் நிலைமையை புரிந்துகொண்டு அங்குள்ள பெண்கள் அனைவரும் பாக்கியாவிற்கு உதவுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.