MS தோனி முதல் ரோஹித் சர்மா வரை – 2022 IPL அணிகளின் 10 கேப்டன்கள்!
2022 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தொடரில் இந்த முறை 10 அணிகள் பங்கேற்று போட்டியிடுகின்றன. IPL மெகா ஏலம் இம்மாதம் தொடங்க உள்ள நிலையில் கேப்டனை தேர்வு செய்யாத அணிகள் சிறந்த கேப்டனை தேர்ந்தெடுக்கும் வகையில் ஏலத்தில் கடுமையாக போட்டியிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் 2022 IPL யின் 10 அணிகளின் கேப்டன்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
IPL மெகா ஏலம்:
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் IPL தொடருக்கான ஏலம் இம்மாதம் 12,13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ள நிலையில் 15 வது சீசன் IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு IPL தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகிறது. கடந்த டிசம்பர் மாதம் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒரு சில அணிகள் இதற்கு முன் அவ்வணிக்கு கேப்டன் செய்த வீரர்களை தக்க வைக்கவில்லை. இதனால் மெகா ஏலத்தில் சிறந்த வீரரை எடுத்து கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் மீண்டும் பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!
இதை தொடர்ந்து புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியை முடித்துவிட்டு கேப்டனையும் தேர்வு செய்துள்ளது. அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இந்த 2 அணிகளை தவிர்த்து மீதம் உள்ள 8 அணிகளில் 5 அணிகள் கேப்டனை தக்கவைத்து கொண்டது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய 3 அணிகளும் கேப்டனை நியமிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற CSK அணிக்கு இந்த முறையும் தோனி கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். தோனியின் ஐபிஎல் தொடரில் 220 போட்டிகளில் விளையாடி 4746 ரன்கள் குவித்துள்ளார்.
மீண்டும் இரவு ஊரடங்கு அமல், காவல்துறை தீவிர கண்காணிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இதனை தொடர்ந்து 5 முறை IPL பட்டம் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 213 போட்டிகளில் விளையாடி 5611 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு 1 வது குவாலிபையர் சுற்றில் வெளியேறிய டெல்லி அணியின் கேப்டன் பண்ட் 84 போட்டிகளில் விளையாடி 2498 ரன்கள் எடுத்துள்ளார். கேரள வீரர் சஞ்சு சாம்சன் IPL தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவற் 121 போட்டிகளில் விளையாடி 3-68 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து இந்த ஆண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு மீண்டும் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.