TNPSC துறைத் தேர்வுகளில் சர்வர் கோளாறு – குழப்பத்தில் தேர்வர்கள்!

1
TNPSC துறைத் தேர்வுகளில் சர்வர் கோளாறு - குழப்பத்தில் தேர்வர்கள்!
TNPSC துறைத் தேர்வுகளில் சர்வர் கோளாறு - குழப்பத்தில் தேர்வர்கள்!
TNPSC துறைத் தேர்வுகளில் சர்வர் கோளாறு – குழப்பத்தில் தேர்வர்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவு உயர்வுக்கான துறை தேர்வுகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வர்கள் தேர்வெழுத முடியாமல் தவிக்கின்றனர்.

TNPSC தேர்வுகள்:

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் TNPSC மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வுகள் இன்று முதல் தொடங்கப்பட்டு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

TCS புதிய நிதியாண்டில் 500,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு – அறிவிப்பு!

இந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்துள்ளது. அதன்படி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வர்கள் தேர்வு எழுதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் தேர்வுக்கான மையங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் துறை தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் ஒன்றான விராலிமலை இலுப்பூர் தெரசா கல்லூரி தேர்வு மையத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கப்பட்டது. தேர்வர்கள் தேர்வு எழுத தொடங்கும் போது திடீரென சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மையத்தில் துறை தேர்வு எழுத சுமார் 200 தேர்வர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!