TNPSC Group 4 தேர்வு ஈஸியா? கஷ்டமா? தேர்வர்களின் கருத்து இது தான்!
தமிழக அரசில் காலியாக இருக்கும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், வசூலிப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு நேற்று (ஜூலை 24) நடைபெற்று முடிந்து உள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது, கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
TNPSC Group 4 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் அதிகமானோர் எழுதும் தேர்வு குரூப் 4 தேர்வு. தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மட்டும் கல்வித்தகுதியாகவும் மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் தான் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைந்த கல்வி திட்டம் – முதல்வர் தொடக்கி வைப்பு!
சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த தேர்வை, 18.50 லட்சம் பேர் பங்கேற்று எழுதினர். கிட்டத்தட்ட 84 சதவீதத்தினர் தேர்வை எழுதியிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் தேர்வில் 15%க்கும் அதிகமானோர் ஆப்சென்ட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் பொது அறிவு பிரிவில் 100 கேள்விகளுக்கும், தமிழ் பாடப்பிரிவு நூறு கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தது. மேலும் தமிழ் பாட வினாக்கள், கணித பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த ஆண்டு தமிழ் கட்டாய பாடமாக மாற்றியுள்ளதால், இதற்கு முன்னர் வரை ஆங்கிலம் படித்தவர்களும் எளிதாக பதில் அளிக்கும் வகையில் தமிழ் எளிதாக கேட்கப்பட்டிருந்தது என சில தேர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் குரூப் 4 தேர்வு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அரசு சார்பில் வெளியிடப்படும் விடைகள் வெளியாக ஒரு வார காலம் ஆகும். இருப்பினும் தற்போது பிரபல பயிற்சி நிறுவனங்கள் மாதிரி விடை தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனைக் கொண்டு தேர்வர்கள் ஓரளவிற்கு தங்கள் மதிப்பெண்களை யூகித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வும் மிக எளிமையாக இருந்ததால், அந்த ஆண்டில் கட் ஆப் அதிகமாக இருந்தது. தற்போதும் அதேபோல் வினாத்தாள் இருப்பதால், இந்த ஆண்டும் கட் ஆப் அதிகமாக இருப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேர்வர்கள் கூறியுள்ளனர்.