இந்தியாவில் மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரி ரத்து – செப்.30 வரை நீட்டிப்பு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரி விலக்கை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு உத்தரவு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியது. இதனால் மாநில வாரியாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருந்ததால் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள், மாஸ்க்குகள் மற்றும் அறுவை சிகிச்சை மாஸ்க்குகள் தேவை அதிகமாக இருந்தது.
தமிழகத்தில் 45 வயது கடந்தவர்களுக்கு ஆசிரியர் பணி? பட்டதாரிகள் எதிர்பார்ப்பு!
இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி மற்றும் சுகாதார செஸ் வரி ஆகியவற்றை மத்திய அரசு நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் படி மத்திய அரசு மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கை அறிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ உபகாரணங்களுக்கான சுங்க வரி விலக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே நீட்டிக்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், உள்நாட்டிலேயே கொரோனா பாதுகாப்பு கருவிகள் தயாரிக்க தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் போது, அவற்றின் மீதான சுங்கவரி மற்றும் செஸ் வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேவையான 80 சதவீத பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு செஸ் வரியாக 5 சதவீதமும், சுங்க வரியாக 7.5 சதவீதமும் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.