இனி எப்போ ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணம் Refund – இதை மட்டும் செய்யுங்க!
இந்தியாவில் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கும் மக்கள் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்கின்றனர் சில நேரங்களில் எதிர்பாராத சூழலில் தங்களது டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது டிக்கெட்டுக்கான தொகை திரும்ப கிடைப்பதில்லை.தற்போது அதற்கான தீர்வை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
முன்பதிவு தொகை:
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில் ரயில் பயணம் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன் இதன் பயண கட்டணமும் மிக குறைவு தான். தற்போது ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் அண்மையில் ரயில் பயணிகள் பயணம் குறித்து புகார் தெரிவிக்க இலவச எண்ணை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது முன்பதிவு செய்த டிக்கெட் தொகையை எவ்வாறு திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது சில குறிப்பிட்ட காரணத்தால் நாம் ரயில் பயணத்தை கடைசி நேரத்தில் கேன்சல் செய்யும் போது தொகை திரும்ப கிடைப்பதில்லை.
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை ஆன்லைன் மூலம் எவ்வாறு சேர்க்கலாம்? எளிய வழிமுறைகள் இதோ!
Exams Daily Mobile App Download
இது குறித்து பெறப்பட்ட புகாரின் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி டிக்கெட் சார்ட் லிஸ்ட் வெளியான பிறகு கூட கேன்சல் செய்தால் தொகை திரும்ப கிடைக்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் ரயில் டிக்கெட் கேன்சல் செய்து. அடுத்த கட்டமாக அதற்கான ரீஃபண்ட் தொகையை கிளைம் செய்ய வேண்டும். அப்போது ரீஃபண்ட் தொகைக்கான டிக்கெட் டெபாசிட் ரசீதை உள்ளீட்டு செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது டிக்கெட் தொகை எளிதாக ரீபண்ட் ஆகி விடும்.