இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை செப்.27 முதல் நீக்கம் – கனடா அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்திய பயணிகள் விமானங்களுக்கு செப்.27ம் தேதி முதல் ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவித்து உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது.
விமான சேவை:
இந்தியாவில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. சர்வதேச விமான சேவைகளுக்கான தடையும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில நாடுகளுக்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத கால தடையை கனடா நீக்கியுள்ளது. இதனால் அனைத்து விமானங்களும் செப்டம்பர் 27 முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
SBI வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்கள் – முழு விபரம்!
கடந்த வாரம் இந்தியாவில் இருந்து வரும் அனைத்து நேரடி வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்களுக்கான தடையை செப்டம்பர் 26 வரை நீட்டித்தது கனடா அரசு. பயணிகள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய இணைப்பு கட்டிடத்தில் ஜென்ஸ்ட்ரிங்ஸ் ஆய்வகத்திலிருந்து நெகட்டிவ் கொரோனா சான்றிதழை பெற வேண்டியது கட்டாயம். மேலும் புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்னதாக அறிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெல் நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க
ஏற்கனவே கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்ட பயணிகளை பல்வேறு நாடுகள் அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வரிசையில் கனடாவும் இணைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உருமாறி பரவி வருவதால் பல்வேறு நாடுகள் விமான சேவையை தடை செய்தது. தற்போது பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் முதல் தடுப்பூசி ஏற்றுமதியும் தொடங்க உள்ளது.