இப்படியெல்லாம் பண மோசடி நடக்குமா? எச்சரிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி!!!
தற்போது பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இன்றைய கால கட்டத்தில் அனைத்து பொருட்களையும் ஆன்லைன் முறையில் வாங்கி கொள்ள பல்வேறு வகையான தளங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் முறையில் மோசடி நடத்துவது சுலபமாகி விட்டது. அத்துடன் ஆன்லைன் முறையில் மோசடி நிகழ்த்த தினமும் புதுப்புது யுக்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியானது பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது, பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடி முறையிலும் விற்பனை செய்வதற்கு சில வலைதளங்களில் ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் முத்திரையை பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு அதிகமான கட்டணம்/கமிஷன்/ வரிகளை கேட்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய ஐடி ஊழியர்களின் பணிக்கு ஆபத்து – வெளியான திடுக்கிடும் தகவல்!
Exams Daily Mobile App Download
இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது போன்று இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் முத்திரையை தவறாக பயன்படுத்தி ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடி முறையிலும் பழைய ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய ரூபாய் நோட்டுகளை விற்பதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்