அரசின் தற்காலிக ஊழியர்களுக்கும் போனஸ் கிடைக்குமா? – மத்திய அரசின் விளக்கம்!
மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள நிலையில், அரசின் தற்காலிக ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
தற்காலிக ஊழியர்கள்:
மத்திய அரசின் அனைத்து நிலை நிரந்தர ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வானது 7-வது ஊதியக்குழுவின் கீழ் 4% அதிகரிக்கப்பட்டு தற்போது 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தொடர்ந்து தற்காலிக ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு ஏதேனும் சிறப்பு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், குரூப் சியில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து குரூப் பி அரசிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் உற்பத்தித்திறன் அல்லாத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக போனஸ் தொகை மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் தகுதியான ஊழியர்களுக்கும் அனுமதிக்கப்படும் என்றும், மத்திய அரசின் ஊதிய முறையைப் பின்பற்றும் யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைப்பு – வந்துள்ள புதிய அப்டேட்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
Exams Daily Mobile App Download
2021-22 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியவர்கள் மற்றும் மார்ச் 31, 2022 அன்று வரை பணியில் இருந்த ஊழியர்கள் மட்டுமே இந்த போனஸ் தொகையை பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2021-22 கணக்கு ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளமானது தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது,