TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைக்குமா? குழப்பத்தில் தேர்வர்கள்!

0
TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைக்குமா? குழப்பத்தில் தேர்வர்கள்!
TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைக்குமா? குழப்பத்தில் தேர்வர்கள்!
TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைக்குமா? குழப்பத்தில் தேர்வர்கள்!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் பி.எட் படித்தவர்களும் தாள்-1 எழுத மாநில அரசு அனுமதித்துள்ளதால், தாள் I எழுதினால் வேலை கிடைக்குமா என்ற குழப்பத்தில் தேர்வர்கள் உள்ளனர்.

குழப்பத்தில் தேர்வர்கள்:

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட் மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டித்தது. தற்போது இந்த தேர்வுக்கான கால அவகாசம் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வில், முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுதுவதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத தகுதி உள்ளவர்கள் முதல் தாளையும் எழுதலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்புபடி, பி.எட் படித்தவர்களும் TET தேர்வு தாள் – I எழுத அனுமதிக்கப்படுவதால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களான பி.எட் படித்தவர்களுடன் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – திண்டுக்கல்லில் நாளை மெகா முகாம்!

இதனால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு பி.எட் படித்தவர்களை TET தேர்வில் தாள் – I எழுத அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பி.எட் பட்டதாரிகள் தாள் I-ல் தேர்ச்சி பெற்றால் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசாங்க உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்று கல்வியியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆனால் பி.எட் பட்டதாரிகள் தாள் I எழுதலாம் என்று TRB அறிவித்துள்ளது. மேலும் பி.எட் படித்தவர்கள், தாள் I எழுதினால் வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை. தாள் I மற்றும் டி.ஆர்.பி-யில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பலரும் தாள் I தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசு இது குறித்து தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என டெட் தேர்வு எழுத உள்ளவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!