கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா? சுகாதாரத்துறை விளக்கம்!
பொதுவாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சில பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று செய்திகள் பரவலாக காணப்பட்டு வருகிறது. இந்த செய்திகளுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியால் காய்ச்சல், தலைவலி போன்ற சில பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்டு. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு மலட்டுத்தன்மை உருவாகிறது என்றொரு செய்தி தற்போது பரவி வருகிறது. இந்த தகவலுக்கு விளக்கம் கொடுத்து மத்திய சுகாதாரத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண்கள், பெண்கள் பலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.
அதிக குழந்தைகளை பெறும் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் – மாநில அரசு அறிவிப்பு!
அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்களுக்கும் இவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எவ்விதத்திலும் உண்மை இல்லை. இது போல தான் அம்மை, போலியோ சொட்டு மருந்தை பயன்படுத்தும் போதும் கூறப்பட்டது. முதலில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, அவற்றை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்த பிறகே, மனிதர்களுக்கு போடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அவற்றில் மலட்டுத்தன்மை உட்பட எவ்வித பக்க விளைவுகளும் கண்டறியப்படவில்லை. அதனால் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று ஆய்வு செய்யப்பட்ட பிறகே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாலூட்டும் தாய்மார்கள் கூட கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட பின்பு கூட தாய்மார்கள் பாலூட்டலாம்’ என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.