ஆதார் எண்ணை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை பற்றி தெரியாம இருக்காதீங்க!!
இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்போது ஆதார் எண்ணை எப்படி பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்த வழிமுறைகளை பார்ப்போம்.
ஆதார் கார்டு
இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபரின் அடையாள அட்டையாகவும், முக்கியமான ஒரு ஆவணமாகவும் விளங்குகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமெனில் UIDAI அதற்கு அனுமதி அளிக்கிறது. தற்போது ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் கடன் கூட வாங்க முடிகிறது.
அத்துடன் தற்போது வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவைகளிலும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். அதனால் உங்களின் ஆதார் எண்ணை நீங்கள் பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிபோய் விடும் அபாயம் கூட உள்ளது. அதனால் UIDAI இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஆதார் எண்ணை பகிர்ந்து கொள்வதால் ஆதார் ஆனது உடனே Hack செய்யப்படும் என நினைக்காதீர்கள். தற்போது ஆதார் எண்ணை நீங்கள் பகிராமல் இருக்க VID அல்லது masked ஆதார் வந்து விட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு – முக்கிய அம்சங்கள் குறித்த முழு விவரம்!
Exams Daily Mobile App Download
மேலும் மாஸ்க் (Masked Aadhaar) செய்யப்பட்ட ஆதார் பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டை பெற விரும்பும் நபர்கள் UIDAI அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது ‘Do You Want A Masked Aadhaar’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, தொடர்பு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் Masked Aadhaar-ன் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். மற்ற எண்கள் முழுவதும் மறைக்கப்பட்டிருக்கும். அதனால் நீங்கள் இதனை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்