தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சார நேரம் அதிகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை பற்றிய அறிவிப்பை தற்போது அரசு வெளியிட்டுள்ளது.
பிரச்சாரம் நேரம் அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இதில் 12,838 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதத்தில் 3 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
பிப்.12 (நாளை) முதல் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இங்கே!
இதையடுத்து வாக்குப்பதிவு 19ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிப்ரவரி 22ம் தேதி அன்று தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்காக பல்வேறு பொது கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்தப்படும். இதில் தனிநபர் இடைவெளி பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறியே.
IPL 2022 திருவிழா ஆரம்பம் – நாளை தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அதனால் கொரோனா மேலும் பரவல் தேர்தலை தகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும் என்று அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தற்போது தேர்தலுக்கான பிரச்சார நேரத்தை பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கூறியதாவது, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் நடத்தப்பட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இதுவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரச்சாரங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனை தற்போது 4 மணி நேர அதிகரித்து அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரங்கள் நடத்தலாம் என்று தளர்வு அளித்துள்ளது.