தமிழகத்தில் அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவங்கள்? அமைச்சர் முக்கிய விளக்கம்!

0
தமிழகத்தில் அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவங்கள்? அமைச்சர் முக்கிய விளக்கம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவங்கள்? அமைச்சர் முக்கிய விளக்கம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவங்கள்? அமைச்சர் முக்கிய விளக்கம்!

தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு பெண்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரத்துறை:

தமிழகத்தில் மக்களின் நலன் கருதி சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இலவச மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். இதையடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு தாய்மை காலத்தில் மிகவும் கனிவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிக்க அரசு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது.

ஜாதகம் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்யும் கோபி, மறுக்கும் ராதிகா – பரபரப்பான ட்விஸ்டுகளுடன் ‘பாக்கியலட்சுமி’!

இந்த நிலையில் தற்போதைய அரசு தமிழகத்தில் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் குழந்தைகளை நோயிலிருந்து காக்க வீடுகளுக்கு அருகாமையில் அங்கன்வாடி மையங்கள் அமைத்து, சத்தான உணவு பொருட்களையும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளையும் அளித்து வருகிறது. இதை தவிர வீடு தேடி மருத்துவம், மினி கிளினிக்குகள், தமிழக அரசின் உயர் சிகிச்சை காப்பீட்டு திட்டம் போன்ற பயனுள்ள திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ சேவையின் தரம் முன்னேறி வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற அனைத்து வழிகாட்டுதல்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிக அளவில் சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு முடிவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலேயே சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!