தமிழக மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை – அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என். சிவக்குமார் பொறுப்பேற்றுள்ள நிலையில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு கேபிள் டிவி:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தமிழ்நாட்டில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களின், வாழ்வாதாரத்திற்கும் நிறைந்த சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் மூலமாகவே அரசின் பல்வேறு சேவைகளை எளிய முறையில் பொதுமக்களுக்கு வழங்க அரசு இ-சேவை மையங்கள் நிறுவப்பட்டது.
ஜூலை 12 க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு – கோவா முதல்வர்!
தற்போது வரை அதன் மூலமாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு குறிஞ்சி என்.சிவக்குமார் அவர்களை நியமித்து உத்தரவிட்டார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அவர் இன்று சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் பேசிய அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் என தெரிவித்தார்.