மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – வெளியான அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலை வாசியை எதிர்கொள்வதற்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படியில் உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டு தொடங்கிய நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் எப்போது அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்த இனி இது கட்டாயம் – பயணிகள் கவனத்திற்கு!
இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது, நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த அகவிலைப்படி உயர்வு, 01.01.2023 அன்று முதல் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download