மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அமைச்சரவையில் முடிவு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அமைச்சரவையில் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அமைச்சரவையில் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு? அமைச்சரவையில் முடிவு!

தற்போது 7வது சம்பள கமிஷனின்கீழ், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வரும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான ஊடக அறிக்கைகளின்படி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) மீண்டும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இம்முறை அகவிலைப்படி தொகை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் DA உயர்த்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இப்போது DA என அழைக்கப்படும் அகவிலைப்படியானது, பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுகட்ட மத்திய அரசாங்கத்தால் அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 7வது ஊதியக்குழுவின் கீழ் ஆண்டுக்கு இருமுறை இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அகவிலைப்படியில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சரிவைக் கண்ட AICPI இன்டெக்ஸ் இப்போது மார்ச் மாதத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. தொடர்ந்து அடுத்த மாதங்களுக்கான AICPI தரவுகள் வரும் மாதத்தில் வெளியாகும்.

மூர்த்தி கண்ணன் நடுவே மாட்டிக் கொண்ட கோபி, குழந்தை பற்றி பேசிய பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

இந்த தரவுகளை வைத்து அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். இப்போது மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு 34 சதவீத DA வழங்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தினால், மத்திய ஊழியர்களுக்கு மொத்த அகவிலைப்படி தொகை 37 சதவீதமாக மாறும். அந்த வகையில் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்தால், 50 லட்சத்துக்கும் அதிகமான மத்திய பணியாளர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!