மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 14% DA உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசின் ஊழியர்களுக்கு சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் அவர்களின் அகவிலைப்படி 14% உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களின் 18 மாத நிலுவை தொகை குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) அரசு உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களின் இழப்பீடு தொகை கணிசமாக அதிகரிக்கும். ஊழியர்களின் DA 3% என்பதைத்தாண்டி 14% உயர்த்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த டிஏ அதிகரிப்பு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதாகும். ஜனவரியில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) அகவிலைப்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் முன்பு 170.5% என்ற விகிதத்தில் டிஏ பெற்றனர், ஆனால் இது இப்போது 184.1% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, துணைச் செயலாளர் சாமுவேல் ஹக், CPSE களின் வாரிய நிலை மற்றும் வாரிய மட்டத்திற்கு கீழே உள்ள அதிகாரிகளுக்கு நன்மை வழங்கப்படும் என்று கூறினார். இந்த ஊழியர்களின் அகவிலைப்படி (DA) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் அனைவரும் இப்போது 184.1% என்ற விகிதத்தில் DA பெறுவார்கள் என்றது கூறியுள்ளார்.
1 -12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசு நாளை முக்கிய ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ உயர்வு) 2022 பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வினை கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை நிலுவையில் வைத்தது. அகவிலைப்படி உயர்வுடன் நிலுவை தொகை அளிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 18 மாதங்களாக நிலுவைத் தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.