சி.ஏ (CA) தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!
கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதம் நடத்தப்பட இருந்த சி.ஏ (CA) தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ தேர்வு ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் அதிகரித்து வரும் நோய் பரவல் காரணமாக இந்திய பொருளாதாரம் துவங்கி மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர். தமிழகத்திலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நோய் தாக்கத்துக்கு உள்ளாகி இறப்பு எண்ணிக்கையும் சற்றே உயர்ந்து வருகிறது. இதனால் கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல மாணவர்களின் கல்வி நிலையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தவிர மெட்ராஸ் ஐஐடி, சென்னை அண்ணா பல்கலை, மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வுகள் உட்பட அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர தமிழக அரசால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் கண்காணிப்பு – சிறப்பு அதிகாரி நியமனம்!!
இந்நிலையில் மே மாதம் 21 ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய கணக்காளர் படிப்புக்கான ICAI CA 2021 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 21 ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதித்தேர்வு மற்றும் மே 22 ஆம் தேதி நடைபெறவிருந்த இடைநிலைத்தேர்வு ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் குறித்தான மறு அறிவிப்பு தேர்வு நடைபெறும் 25 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.