CA தேர்வை ஆன்லைனில் நடத்த கூடாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு !!
ICAI எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் கழகத்தின் 2020 ஆண்டிற்கான தேர்வுகள் கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும், அடுத்தாக நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் என்பதும் தெரியவில்லை. இதன் காரணமாக பல்வேறு அரசுத் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள்
CA தேர்வு விவகாரம்:
நாடெங்கும் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், சிஏ படிப்புக்களுக்கான தேர்வுகள் வரும் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், இத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில், ‘மத்திய அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஐசிஏஐ வெளியிடவில்லை. இது போன்ற தேர்வை நடத்துவது ஒரு கல்வி நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடுவதை தடை செய்யும் மத்திய அரசின் வழிகாட்டுதல் விதிமுறையை மீறும் செயலாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் தீர்ப்பு :
நேற்று இத்தேர்வு விவகாரம் விசாரணைக்கு வந்தது. அதில் கூறப்பட்டதாவது ‘சிஏ தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது அவ்வாறு நடத்தினால் தேர்வர்களின் பகுப்பாய்வு திறன்களை சோதிக்கும் தேர்வாக இருக்கும் எனவும் கூறினர். சுமார் 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் இருக்கும். விளக்கமான பதில்களை அளிக்க வேண்டி இருக்கும்.
TNPSC தேர்வு தேதி மாற்றம்
மேலும், இது குறியீடு இடுவது போன்ற கேள்விகளை உள்ளடக்கியது கிடையாது. எனவே, சிஏ தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது,” என வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து, ‘மாணவர்களின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்,’ என கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். எனவே கல்வி மையங்களில் தான் இத்தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்