நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைவராக பிவிஆர் சுப்பிரமணியம் நியமனம் – வெளியான அறிக்கை!
நிதி ஆயோக்கின் புதிய தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
புதிய தலைவர்:
கடந்த 2022 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பரமேஸ்வரன் ஐயர் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது உலக வங்கியின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதனால் நிதி ஆயோக்கின் புதிய தலைவரை தேர்வு செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் – முக்கிய செயல்முறைகள் வெளியீடு!
இது குறித்து வெளியான அறிக்கையில், உலக வங்கியில் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், நிதி ஆயோக் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வுபற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் அவர்களை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அவர் பதவி ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.