பிரபல பெண் தொழிலதிபரை களமிறக்கும் பிக் பாஸ் – சூடு பிடிக்குமா நிகழ்ச்சி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது புதிய போட்டியாளர் ஒருவரை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 5:
டிஆர்பியில் முதல் இடத்தை பிடிக்கும் வெற்றிகரமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்தியாவின் பிரபல மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. அந்தந்த மொழிகளில் உள்ள உச்சகட்ட பிரபல நடிகர்கள் தொகுப்பாளர்களாக உள்ளனர். தமிழில் உலக நாயகன் கமல் கடந்த 4 சீசன்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தற்போது வரும் அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 5வது சீசன் தொடங்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தல அஜித் ‘வலிமை’ படத்தின் சூப்பர் அப்டேட் – இன்று பட காட்சிகள் வெளியீடு!
இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் பற்றிய பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் உறுதியாக அறிவிப்புகள் வெளிவரவில்லை. அந்த வகையில் பிரியா ராமன், பிரியங்கா, புகழ், சூசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பிரிட்டனில் சில ஆண்டுகள் பணிபுரிந்த பின், தென்னிந்தியாவிலேயே முதல் முதலாக ஐ லேஷ் ஸ்டுடியோ மூலம் பிரபலமானவர் தொழிலதிபர் ரேணுகா பிரவீன்.
‘கண்ணனாக மாறி தான் அந்த சீனில் நடித்தேன்’ – மனம் திறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம்!
இவருக்கு தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளான சமந்தா, சினேகா, மீனா போன்றவர்கள் தோழிகளாக உள்ளனர். தவிர பிரபல நடிகைகள் பலர் இவரின் அழகு நிலையத்திற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இம்முறை, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரேணுகா பிரவீன் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த முறை சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் தொழிலதிபர்களையும் போட்டியாளர்களாக களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பலதரப்பட்ட போட்டியாளர்கள் இந்த முறை கலந்து கொள்ள இருப்பதால் நிகழ்ச்சியில் பல கலவரங்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பது உறுதியாகிறது.