சென்னை பெசன்ட் நகரில் நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை – வண்டிகள் ஓடாது!
சென்னை பெசன்ட் நகரில் நாளை முதல் 8 வாரங்களுக்கு வாகனமில்லா ஞாயிற்றுகிழமை என்னும் திட்டம் அமலாக இருக்கிறது. அதாவது, இந்த திட்டத்தில் பெசன்ட் நகரில் எந்த வாகனங்களும் செல்லாமல் ரோட்டிலேயே அனைவரும் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனமில்லா ஞாயிற்றுகிழமை
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்வதால் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், ஒரு நாள் முழுக்க எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மொத்த குடும்பமும் தெருக்களில் ஓடியாடி விளையாட வேண்டும் என்பதற்காக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நாளை முதல் வாகனமில்லா ஞாயிற்றுகிழமை திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் போக்குவரத்து தடை செய்யப்படும் எனவும், சாலைகளில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் விளையாடலாம், உடற்பயிற்சி செய்யலாம் அல்லது ஏதேனும் பயிற்சிகளில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரைக்கும் இந்த வாகனமில்லா ஞாயிற்றுகிழமை திட்டம் செயல்பட இருக்கிறது.
TCS Increment பாலிசியில் எந்த மாற்றமும் இல்லை – ‘இவர்களுக்கு’ ஊதிய உயர்வு!
நாளை மட்டுமல்லாமல் செப்டம்பர் 11, 18, 25, அக்டோபர் 2, 16, 23 ஆகிய தேதிகளில் இந்த வாகனமில்லா ஞாயிற்றுகிழமை திட்டம் அமலாக இருக்கிறது. மேலும், இந்த புதிய திட்டத்திற்காக போக்குவரத்தில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரைக்கும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படவுள்ளது. மேலும், இந்த வாகனங்கள் அனைத்தும் 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலை பக்கமாக திருப்பி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறையின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்